Saturday, March 15, 2014

அனுபவம்

அவசர தேவை...
ஒரு செம்பு சொம்பும்.... போன்சாய் ஆலமரமும்...
... 
வெள்ளிகிழமை...
சமூக நலம் கருதும் அமைப்பொன்றில் ஈகோ பிரச்சனை...
நீங்க வந்து தான் தீத்து வைக்கனுமுன்னு சொல்லிட்டாங்க...
நம்மால முடிஞ்சது போய் குட்டையை குழப்பிட்டு வந்தாச்சு...
...
சனிக்கிழமை...
அண்ணன் தம்பி குடும்ப பிரச்சனை ...
நீங்க வந்தா தான் சுமூகமா முடிப்பீங்க ... பிளீஸ்...னு போன்...
போய் அவங்க அவங்க பிரச்சனைகளை கேட்டதுமே ...
நமக்கு பிபி...ஹை...லோ ...எல்லாமுமே வந்துடும் போல...
எப்படி எப்படியோ பேசி.... கோர்ட்டுக்கு போக வச்சாச்சு.....
....
ஞாயித்துகிழமை..
பல ஆண்டுகளாக தீராத சமுதாய சங்க பிரச்சனை...
அறகட்டளை உறுப்பினர் என்ற முறையில் அழைப்பு....
திடீர் .... ஞானோதயமாக நான் சொன்ன செயல்திட்டங்களை
அமுல்படுத்த முடிவெடுத்து கமிட்டியும் அமைத்து....
செயலாக்கும் பொறுப்பை என் தலையில் கட்டி விட்டார்கள்...
....
திங்கட்கிழமை...
கணவன் மனைவி சண்டை...
பிரச்சனைகளை கேட்க ஒருவன் தயார் என்றதுமே..
அருவி போல கொட்டுகிறார்கள் இரு தரப்புமே...
பல பல சந்தேகங்களை கேட்கிற சாக்கில் அவர்கள் மேல்
அக்கறை இருப்பதாக காட்டியதாலே அவர்கள் பிரச்சனை
முடிந்ததாக எண்ணி சந்தோசமாக வழியனுப்பி வைத்தார்கள்...
....
செவ்வாய்கிழமை....
..
...
...
...
....
....
...
....
...
..
.
.
காலை 7 மணிக்கு போன்.
...
என்னது...
..
அப்படியா...
...
இதோ இப்போ வந்துடறேன்...
...
.
.
.
.
திரும்பி பார்த்தா வூட்டம்மா.....
வாசல் தொளிச்சு கோலம் போட்டுட்டு வந்தாங்க
....
போங்கடா நீங்களும் உங்க பஞ்சாயத்தும் ....
ஒரு டீக்கும்... பண்ணுக்கும் .... மீறி போனா சனிக்கிழமை
அண்ணன் தம்பினால அதிர்ஷ்டமா கிடைச்ச பிரியாணிக்கும்
பஞ்சாயத்து பண்ணிட்டு இருந்தா எங்க வூட்டுல ...
”ஏனுங்க உங்க கட்சி சின்னம் இதுதானேன்னு .....
வெளுக்குமாத்த தூக்கிடுவாங்க .......
அப்பறம் நான் பஞ்சாயத்தை கூட்டனும்.....

No comments: