Saturday, March 15, 2014

கேட்டால் கிடைக்கும்

13.11.2013
என் கொழுந்தியாவின் திருமணம்... 
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற சிவன்மலை..கோயிலில்....

சுற்றத்தாரிடம் குசலம் விசாரித்து கொண்டிருந்த என்னை...
சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டார்கள்... 
(அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நான்)
....
அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை
சமர்பிக்கும் போதே திருமண கட்டணம்
மொத்தம் ரூ.1500/.... என சொல்லியிருந்தார்களாம்... 
கடைசியாக கையெழுத்து போட்ட என்னிடம்
ரூ 1500 கொடுத்து கொடுக்க சொன்னார்கள்....
(எந்த ரூபத்திலும் சனி தேடிவரும் போல...)

திருமண கட்டண ரசீது -ரூ.250
கோவில் உபயவரவு ரூ.500
கேமரா கட்டணம் ரூ.100 என மூன்று ரசீது தந்தார்கள்....
ரூ.1500 பணம் கொடுத்துட்டு ரசீதுகளை வாங்கி பார்த்த நான்
அருகிலிருந்த ... என் மனைவியின் தம்பியிடம் .......
”மீதி ரூ.650... தருவாங்க .. ஒழுங்கா வாங்கிட்டு வா”னு சத்தமாக
சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் வந்துட்டேன்.....
மறு பேச்சு ஏதுமில்லாமல் ரூ 650 கொடுத்தனுப்பினார்கள்....
கோவில் ஊழியர்கள் .... ஆகவே தான் சொல்கிறேன்....
#கேளுங்கள்_கேட்டால்_கிடைக்கும்
 

அன்பு மகளோ ....

”அப்பா...”....
“சொல்லுப்பா....’....
”நான் பெருசாகி டீச்சர் ஆகிடறேன்பா...”.........
...
சொன்னது.... முதலாம் வகுப்பில்
வகுப்பு தலைவியா இருக்கும்
என் மகள் வானதி.....
...
”ஏம்பா...டீச்சர் வேலை தான் உனக்கு பிடிக்குமா.....”
”இல்லைப்பா....”..
நீங்க தானே அடிக்கடி பணம் இல்லைங்கறீங்க.....அதான்.....
...
... ஓ.... டாக்டருக்கு படிக்க அதிக பணம் செலாவகும்...
அதனால டீச்சர் ஆகறேன்னு சொல்றயா.....
....
”அதில்லைப்பா...”....
...அப்பறம்.....
...
...”டீச்சர் தானே அடிக்கடி
”டேர்ம் பீஸ்” கொண்டு வா....
டைக்கு பெல்ட்டுக்கு பணம் கட்டு.....
”டியூசன் பீஸ்” கொண்டு வா....
சாட்டர் டே யூனிபார்ம்... ..ஸ்போர்ஸ் டிரஸ்
வாஙக பணம் கொண்டு வா...
தீபாவளி போனஸ் கொண்டு வா....
(அதுக்கு பிரச்சனை பண்ணி நாங்க தரலை)...
இப்படி அடிக்கடி பணம் வாங்கறாங்க....
நிறைய்ய பணம் வசூல் பண்ணி வச்சுருக்காங்க.....
நான் டீச்சர் ஆனா இதே மாதரி எல்லோர்த்துகிட்டையும்
வசூல் பண்ணலாம் இல்லையா.....”....

அனுபவம்

அவசர தேவை...
ஒரு செம்பு சொம்பும்.... போன்சாய் ஆலமரமும்...
... 
வெள்ளிகிழமை...
சமூக நலம் கருதும் அமைப்பொன்றில் ஈகோ பிரச்சனை...
நீங்க வந்து தான் தீத்து வைக்கனுமுன்னு சொல்லிட்டாங்க...
நம்மால முடிஞ்சது போய் குட்டையை குழப்பிட்டு வந்தாச்சு...
...
சனிக்கிழமை...
அண்ணன் தம்பி குடும்ப பிரச்சனை ...
நீங்க வந்தா தான் சுமூகமா முடிப்பீங்க ... பிளீஸ்...னு போன்...
போய் அவங்க அவங்க பிரச்சனைகளை கேட்டதுமே ...
நமக்கு பிபி...ஹை...லோ ...எல்லாமுமே வந்துடும் போல...
எப்படி எப்படியோ பேசி.... கோர்ட்டுக்கு போக வச்சாச்சு.....
....
ஞாயித்துகிழமை..
பல ஆண்டுகளாக தீராத சமுதாய சங்க பிரச்சனை...
அறகட்டளை உறுப்பினர் என்ற முறையில் அழைப்பு....
திடீர் .... ஞானோதயமாக நான் சொன்ன செயல்திட்டங்களை
அமுல்படுத்த முடிவெடுத்து கமிட்டியும் அமைத்து....
செயலாக்கும் பொறுப்பை என் தலையில் கட்டி விட்டார்கள்...
....
திங்கட்கிழமை...
கணவன் மனைவி சண்டை...
பிரச்சனைகளை கேட்க ஒருவன் தயார் என்றதுமே..
அருவி போல கொட்டுகிறார்கள் இரு தரப்புமே...
பல பல சந்தேகங்களை கேட்கிற சாக்கில் அவர்கள் மேல்
அக்கறை இருப்பதாக காட்டியதாலே அவர்கள் பிரச்சனை
முடிந்ததாக எண்ணி சந்தோசமாக வழியனுப்பி வைத்தார்கள்...
....
செவ்வாய்கிழமை....
..
...
...
...
....
....
...
....
...
..
.
.
காலை 7 மணிக்கு போன்.
...
என்னது...
..
அப்படியா...
...
இதோ இப்போ வந்துடறேன்...
...
.
.
.
.
திரும்பி பார்த்தா வூட்டம்மா.....
வாசல் தொளிச்சு கோலம் போட்டுட்டு வந்தாங்க
....
போங்கடா நீங்களும் உங்க பஞ்சாயத்தும் ....
ஒரு டீக்கும்... பண்ணுக்கும் .... மீறி போனா சனிக்கிழமை
அண்ணன் தம்பினால அதிர்ஷ்டமா கிடைச்ச பிரியாணிக்கும்
பஞ்சாயத்து பண்ணிட்டு இருந்தா எங்க வூட்டுல ...
”ஏனுங்க உங்க கட்சி சின்னம் இதுதானேன்னு .....
வெளுக்குமாத்த தூக்கிடுவாங்க .......
அப்பறம் நான் பஞ்சாயத்தை கூட்டனும்.....