Friday, November 29, 2013

துரோகிகளை தண்டிக்க....

உனக்கு துரோகமிளைத்தவனை 
எவ்வண்ணமெல்லாம் நீ தண்டிக்கலாம் ?

அகால இரவொன்றில் அவன் அறைக்குள் 
பெட்ரோலூற்றி நெருப்பு வைக்கலாம்,

நல்லவிதமாய் உறவாடி நயவஞ்சக காய்களை 
நகர்த்தி வாழ்வின் பெரும்பாதாளத்தில் கவிழ்கலாம்,

ஊர்பூராவும் அவனை பற்றி அவதூறு பரப்பலாம்,
பார்க்கிற இடத்திலெல்லாம்
பளாரென அவனை அறைய சீறிபாயலாம்,

விடுதியொன்றில் எதேச்சையாய் சந்திக்க
நேர்கையில் முகத்தில் உமிழ்ந்து அவமதிக்கலாம்,

கூலிப்படை கொண்டு குரூரமாய் தாக்கி ஊனப்படுத்தலாம்,

அவன் குடும்பத்தில் உட்பூசல் உண்டாக்கி நிலை குலைக்கலாம்.

காலம் முழுக்க அவன் செய்ததை
எண்ணி எண்ணி சபித்து கொண்டே இருக்கலாம்,

ஒவ்வொரு பொழுதும் அவன் நிம்மதியை அழிக்க‌
ஒரு பொல்லாததை செய்தவாறே இருக்கலாம்....

என்றாலும் எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறையப்‌ போவதே இல்லை....

ஆதலால் நீஅவனை மன்னித்துவிடலாம்...

படித்ததில் பிடித்தது...

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

முதலில் நம் மனம் தான் துரோகி...