Wednesday, October 16, 2013

தோள் சாய்ந்த தோழமை நினைவுகள்...

நேசமோடு உன்னை நேசித்த போது
நெருப்பாக சுட்டாய்...
அன்போடு அறிவு தெளிவோடு பழகியபின் ...
வாஞ்சையோடு வாழலாம் என்ற போது
கனிவாய் கசிந்துருகி காத்திருக்க சொன்னாய்....
வாழ்வில் ஒரு திருப்பம்....
வஞ்சனை செய்தவனானேன்.....

தோழமையோடு தோள் கொடுத்து
நான் செய்த உதவிகளுக்கு....
காலத்தினால் நீ செய்தவை
ஈடாகுமா இனியவளே....

மண்வீடு கட்டி மனசு பூரித்ததும்
துக்கமயமான இடுகாட்டில்
இட்டுகட்டி நம்மை பேசியதும்...
துன்பத்திலும் இன்பமாக நாம் பேசியதும்...
இனியும் வருமா இனியவளே...

கண் காணாமல் போனால்
கவலை மறக்கலாம்...
காலம் நமக்கு கருணை காட்டலாம்...
எண்ண அலைகள் மோதும் உன் உள்ளம்...
என் நினைவு உண்டா... என ஏங்கும் என் உள்ளம்..
இம்மியளவும் மாறாது நம் இருவர் உள்ளம்...
கடல் தாண்டி கல் திரை இட்டு மறைத்தாலும்
மனதோரம் இருக்குமே சரவணனின்
தோள் சாய்ந்த தோழமை நினைவுகள்...

முகநூல் பக்கத்திலிருந்து....



அழகு ஓவியமே .... 
அதிர வைக்கும் கொழுசு கட்டி ஆடி வரும்
அழகான மான்குட்டியே..... 
சேலை கட்டினால் 
சோலைகள் சலசலக்குமே....

எள்ளி நகையாடினால் எரிமலையாகுபவளே...
பணியிலும் திமிரு காட்டியவளே....
பூ போன்றவளே ...
புயலாக மாற தயங்காதவளே....

சில நாட்கள் பழகினாலும்
பல யுகங்கள் மனத்திரையில் மறையாதவளே...

அழைத்தால் வந்திடுவேனென்று ...
அழைக்க மறுந்தவளே .... என்னை மறக்க நினைப்பவளே...
நீவிர் வாழ்க பல்லாண்டு... வள்ளுவன் வகுத்த குறள் போல...

செக்க செவந்தவளே...
செப்டம்பரில் மணம் முடிக்க இருப்பவளே.... நீவிர் வளர்க
செந்தமிழின் செழுமை போல.........
செங்கரும்பின் இனிமை போல......
தெவிட்டாத தேனின் சுவை போல ...

நவரத்தினங்களை பெற்று நலமுடன்
இப்பூவுலகில் வளமோடு வாழ வாழ்த்துகிறேன்..


இரட்டை கோபுரங்களை தகர்த்த செப்டம்பர்-11 ...

என் உள்ளமெனும் பூஞ்சோலையில்
வண்ணத்து பூச்சியாக ரீங்காரமிட்டு வந்த
என் தோட்டத்து வெண்ணிலா 
தாமரை போன்ற மேடையிலே
உகந்த மணாளன் கைபற்றி 
உன்னதமான வாழ்வின் அடுத்த அடியான
மனையாள் ஆனாளே.... இன்று...

மனம் மகிழ்கிறது.... 
கிஞ்சித்தும் வருத்தமில்லை....
காண கண் கோடி வேண்டுமே ... நீ
தாங்குவாயோ என்றா நல்லதோர் எண்ணத்தில்
அழைக்க மறந்தாலும் என் உள்ளமெல்லாம்
உங்கள் நலம் சார்ந்தே இயங்குகிறதே .....
வாழ்வீர் நீவிர் வையம் போற்ற......

என்றேனும் என் நினைவுகள்
வந்தால் தோள் சாய்ந்த தோழன்
ஒருவன் இருந்தானே என்ற உன் நினைவுகளே
என்னை மகிழ்விக்கும்... நானறிய வழியில்லையே...

நாலும் தெரிந்தவன் என்றும்
நல்லதொரு தோழன் என்றும்
சிந்திப்பதில் சிந்து பாத்ம் தோற்றானே என்று
சிலோகித்து நீ சொன்ன வார்த்தைகளும்
என் மனக்கண்ணில் வந்து போகுதடி....

இன்னொருவனுக்கு சொந்தமாகி விட்டாய்...
இன்றோடு உன் நினைவுகளில்
எனக்கு சொந்தமானதை மட்டும் வைத்திருந்து
வாழ்கிறேன்.....

பேரிட்சை பழம் போல
பெரிய உதட்டுக்காரி......
கடிதமெழுத சொன்ன கண்மணியே...
எழுதிவிட்டேன் என் இறுதி கடிதம் தனை...

பாவியிவன் பார்வை பட கூடாதென்று
பறக்க போகும் பாவையே....
மதியூகியாய் இருந்தவளே....
மனமெல்லாம் நிறைந்தவளே....
காலமெலம் நீ கண் கலங்கமல் வாழனும்....
என்றும் என்னிடம் நீ என்னால் முடிந்த
உதவிகளை எதிர்பார்க்கலாம்.. நண்பனாய்...
உதவ காத்திருக்கிறேன் ... உத்தமியே.......

என் எண்ணங்கள் உன் வண்ண வாழ்வின் நலனையே விரும்புகிறது...
வாழ்க பல்லாண்டு ..... பல்லாயிரத்தாண்டு......


தோள் சாய்ந்த தோழமை நினைவுகள்...
முகநூல் பக்கத்திலிருந்து....