Wednesday, October 24, 2012

காகிதமும் ஆயுதமாகும்

லஞ்சத்துக்கு எதிராக எத்தனையோ அமைப்புகள், நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கின்றன; ஆனாலும், லஞ்சம் ஒழிந்தபாடில்லை; காரணம், இந்த போராட்டங்களிலே மக்களின் பங்களிப்பில்லை. லஞ்சத்தை ஒழிக்க ஆயுதம் ஏந்திப் போராட வேண்டியதில்லை; ஒரே ஒரு காகிதம் போதும். தகவல் உரிமைச் சட்டம் என்பது, இந்திய மக்களுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம்; அதைப் பயன்படுத்தி, லஞ்சத்திலிருந்து தப்பித்திருக்கிறார் ஒரு வாசகர்.

அவரது அனுபவம்...

நான், திருப்பூர், தொங்குட்டிபாளையத்தைச் சேர்ந்தவன். கடந்த 2010, டிச.19ல் கொஞ்சம் மது அருந்தி விட்டு, எனது வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில், போதையில் வாகனம் ஓட்டியோரை போலீசார் பிடித்தனர். ஒவ்வொருவரிடமும் அபராதம் என்ற பெயரில், தலா 2,000 ரூபாய் வாங்கினர்; எதற்கும் ரசீது இல்லை.

பலரும் பணம் கொடுத்துச் சென்று விட்டனர். எனக்கு லஞ்சம் தர விருப்பமில்லை. பணம் தராததால், எனது வண்டியை அருகிலுள்ள டூ வீலர் ஸ்டாண்ட்டில் நிறுத்தச் சொன்னார்கள்; நிறுத்தி விட்டு, வீடு திரும்பி விட்டேன். அதன்பின், பல முறை அணுகியும் போலீசார் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை; வண்டியையும் தரவில்லை.

நான் வாக்குவாதம் செய்ததால், எனது ரேஷன் கார்டை வாங்கிக் கொண்டு, வண்டியைக் கொடுத்தனர். பல நாட்கள் அலைந்தும் ரேஷன் கார்டைத் தரவில்லை; நான் தகவல் உரிமைச் சட்டத்தில், "குறிப்பிட்ட தேதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக எத்தனை பேர் மீது வழக்கு பதிவானது' என்பது உட்பட பல விபரங்களைக் கேட்டு, எஸ்.பி., ஆபீசுக்கு மனுச் செய்தேன்; பதில் வந்தது.

அன்றைய நாளில் 151 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 2 பேரிடம் மட்டுமே கோர்ட் மூலமாக 1,900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சோதனை நடந்து 8 மாதங்கள் கழித்தும் அதே நிலைதான்; இந்த விபரங்களை வைத்து, திருப்பூர் எஸ்.பி.,யிடம் நேரடியாக மனு கொடுத்தேன்; அவர் எடுத்த அதிரடியில், அடுத்த ஒரு மணி நேரத்தில் எனது ரேஷன் கார்டு, எனது கைக்கு வந்தது.

எப்படியோ, லஞ்சம் தரக்கூடாது என்று நான் போராடிய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது................ 


தினமலர் 08.01.2012 ல் வெளிவந்த கட்டுரை.................. சாத் சாத் நானே தான்.......................... 

4 comments:

ராஜா said...

Super Saravana Prakash...

Unknown said...

நன்றி ராஜா

tnebdmts said...

அருமை

tnebdmts said...

அருமை